சவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா?..வேட்பாளர்களுக்கு துரைமுருகன் கேள்வி!
சென்னை: என் மகன் கதிர் ஆனந்த் போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திமுக சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகன் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று வேலூரில் துரைமுருகன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஆட்சி மாறும்
துரைமுருகன் தனது பேச்சில், அதிமுகவில் 30 எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் இடைத்தேர்தல் முடியட்டும். எல்லாம் சரியாக நடக்கும். மு.க ஸ்டாலின்தான் முதல்வராக பதவி ஏற்பார். நானே ஆளுநரிடம் ஸ்டாலினை அழைத்து சென்று பதவி பிரமாணம் செய்ய வைப்பேன்.

அரசியல் தெரியும்
என்னுடைய மகனுக்கு அரசியல் தெரியாமல் இல்லை. அவருக்கு நன்றாகவே அரசியல் தெரியும் . நாடாளுமன்றத்தில் பேச ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் தெரியாமல் நாடாளுமன்றம் செல்வதால் பயனே இல்லை. அதற்கு வீட்டில் சும்மாவே இருக்கலாம்.

ஆங்கிலம் முக்கியம்
இப்போதெல்லாம் நம் எம்பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் மகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். என் மகன் என்பதற்காக சொல்ல வரவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் மிக சிறப்பாக ஆங்கிலத்தில் பேச போகிறான்.

சவால்
வேண்டும் என்றால் சவால் வைத்துக் கொள்ளலாம். எல்லா வேட்பாளர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். ஒரு அரை மணி நேரம் பேச சொல்லலாம். யார் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார் என்று பார்க்கலாம். என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச அவர்களால் முடியுமா என்று பார்க்கலாம், என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications