சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.. தமிழக அரசு முக்கிய விளக்கம்
சென்னை: சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழக அரசு வரும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று அறிவித்தது.

அண்டை மாநிலங்களில் மதுவாங்குவதற்காக எல்லைப்புற மாவட்டத்தினர் மொத்தம் மொத்தமாக சென்ற நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுப்பதற்காக மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகளை திறக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் மதுக்கடைகள் திறப்பு விஷயத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாது என்று நேற்றே விளக்கம் அளித்து இருந்தது. சென்னை மாநகர எல்லைக்குள் வராத, கட்டுப்பாட்டில் வராத பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications