விஜயகாந்த் கழுத்தில் துளையா? டிரக்கியாஸ்டமி சிகிச்சையா?.. மியாட் மருத்துவமனை விளக்கம்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை மியாட் மருத்துவமனை மறுத்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் மருத்துவமனை சேர்க்கப்பட்டதால் தொண்டர்கள் கவலை அடைந்த நிலையில் நவ. 23ஆம் தேதி மியாட் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருந்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மியாட் மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாகவும் அவருக்கு திடீரென 24 மணி நேரமாக உடல்நிலை சீராக இல்லை என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நேற்று கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு பைப்பாப் மாஸ்க் எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் மூலம் கூடுதல் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. டிரக்கியாஸ்டமி என்பது கழுத்தில் துளையிட்டு மூச்சுவிட சிரமப்படுவோரின் நுரையீரல் குழாயுடன் செயற்கை சுவாசத்தை இணைப்பதுதான். இந்த தகவலை அறிந்த தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் வேதனை அடைந்து அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது தவறான தகவல் என மியாட் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். விஜயகாந்துக்கு வழக்கமாக நுரையீரல் பிரச்சினைக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுகிறது என்றார்.
-
ஒத்த சீட்டு வைகோ..கடுகடு கம்யூனிஸ்ட்கள்! விரக்தியில் விசிக திருமா! ஸ்டாலினுக்கு புது தலைவலி ஸ்டார்ட் -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
பாஜக கூட்டணிக்கு போகும் விஜய்? மறுக்காத சிடிஆர் நிர்மல் குமார்.. கொடுத்த விளக்கத்தை பாருங்க -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
இப்போ வந்த தேமுதிகவுக்கு அதிக சீட்டா.. எங்களுக்கு இப்படி சொல்ல கூடாது.. திமுக கூட்டணிக்குள் சர்ச்சை! -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications