Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னையே "கிளீன்" ஆகுதாமே.. நாலாபக்கமும் பறக்கும் ஆபிசர்ஸ்.. அடியோடு மாறுதா? அடையாளமே மாறுதா? வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில் பணிகள், மேம்பாலங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் என பல்வேறு பணிகளில் சென்னை மாநகரம் ஈடுபட்டு வரும்நிலையில், வடசென்னை குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத்திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. பெரிய தொழில் நகரம் பெரம்பூர் அமைந்திருப்பதும் வட சென்னையில்தான். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோகிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழும் பகுதி இதுவென்றாலும், வளர்ச்சி என்னமோ மிகவும் குறைவுதான்.

North Chennai and Are there so many modern changes in North Chennai by Tamil Nadu Government

அபரிமிதமான வளர்ச்சி: அதாவது, மத்திய சென்னை, தென் சென்னையில் அபரிமிதமான வளர்ச்சி உள்ளது போல, வடசென்னையில் அபார வளர்ச்சி எதுவும் இல்லை. அதனால்தான், வடசென்னையையும் டாப் லெவலுக்கு கொண்டு வர தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காகவே, தொழில் நிறுவனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் என்று பல அம்சங்களை இந்த வடசென்னையில் நிறுவி வருகிறது.

தற்போது, "வட சென்னை வளர்ச்சி திட்டம்" என்ற புதிய திட்டத்தை உருவாக்கி, இந்த திட்டத்துக்காக ரூ.1000 கோடி 3 வருடங்களில் செலவிடப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த பணிகளில்தான் தற்போது கவனத்தையும் செலுத்தி வருகிறது.

அடிப்படை வசதிகள்: வடசென்னையில், அடிப்படை வசதிகள் முதல் அல்டிமேட் வசதிகள் வரை ஒன்றுவிடாமல் மாற்ற போகிறதாம்.. இன்னும் 5 வருடங்களில் பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அய்னாவரம், மாதவரம், சூரப்பேட்டை ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் வரப்போகிறதாம். இவை அனைத்துமே குடியிருப்பு வளாகங்களாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளது.. இதுவரை 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 35 மாடிகள் வரை இனி உயர போகிறது..

இன்னொருபக்கம், பெரம்பூர், மாதவரத்தில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளும் துரிதமாகி வருகின்றன... அதனால்தான், இந்த பகுதிகளில் அதிகமானோர் வீடுகளை வாங்குகின்றனர்... நிலத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்தபடியே உள்ளது.

ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், வடசென்னையின் ஃபேமஸ் பகுதியான காசிமேடு, மெரினா பீச் போலவே, நவீனப்படுத்தப்பட உள்ளதாம்.. அதாவது காசிமேடு டூ நெட்டுக்குப்பம் வரை இந்த பீச் ஜொலிக்க போகிறது.. மெரினா பீசிசில் உள்ளது போலவே, குதிரை சவாரி, உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பீச்சிலும் வரப்போகிறது. முக்கியமாக, நீரூற்று நடைபாதைகள், மீன் சிலை வரப்போகிறது.

வடசென்னையவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆரோக்கியம், விளையாட்டு, போக்குவரத்து, என அனைத்துமே மேம்பட போகின்றன.

மாறுது எல்லாமே: இவைகளுடன், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், திருமண மண்டபங்கள், பஸ் ஸ்டாண்டுகளும் நிலையங்களும் வரப்போகின்றன.. உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட உள்ளது. மொத்தத்தில் வட சென்னை வளர்ந்த சென்னையாக விரைவில் மாறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

ஆக மொத்தம், பின்னி மில், சிம்சன் தொழில் நகரம், பட்டாளம், புளியந்தோப்பு என சின்ன சின்ன தொழில் நிறுவனங்களை கடந்து, சென்னையின் கம்பீரமாக வடசென்னை உயர போகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+