திடீரென நிறம் மாறிய வட சென்னை கடல்.. இதுதான் காரணமா? கொதிக்கும் மக்கள்
சென்னை: வட சென்னையில் எண்ணூர், பெரிய குப்பம் ,திருவொற்றியூர், கிளி ஜோசியம் நகர், மஸ்தான் கோவில் குப்பம், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கடல் நீரில் கலப்பதால் கருப்பாக வடசென்னை கடல் மாறி உள்ளது. இதனால் கடல் நீர் மாசு அடைந்து கரையோரம் பிடிக்கப்படும் மீன்களும் விஷத்தன்மையாக மாறும் அபாயம் இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரை போல் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையேயான கடற்கரையை ரூ.100 கோடியில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதன்படி அந்த பகுதியில் நடைபாதை, பெஞ்சுகள், யோகாவசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உணவுக்கடைகள், சைக்கிள் பாதை போன்றவை அமைக்கப்பட உள்ளது. ஒரு பக்கம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வங்கக்கடல் கழிவுநீர் கலப்பால் மோசமான நிலையில் உள்ளது.

சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வந்த போதிலும் அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்ல. பாதாள சாக்கடை இணைப்புகள் இல்லாமல் முக்கிய பகுதிகள் உள்ளன. குறிப்பாக எண்ணூர், பெரிய குப்பம் ,திருவொற்றியூர், கிளி ஜோசியம் நகர், மஸ்தான் கோவில் குப்பம், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் கடல் நீரில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கடல் நீர் மாசு அடைந்து கரையோரம் பிடிக்கப்படும் மீன்களும் விஷத்தன்மையாக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் அருகே சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கடலில் அப்படியே கலக்கப்படுவதால் அந்த கடற்கரை பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் கலப்பால் எண்ணூரை சுற்றி கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் அமைத்து, கழிவு நீர் கடலில் சென்று கலக்கும் வகையில் திருப்பி விடப்பட்டு உள்ளதை உடனே தடுக்க வேண்டும் என்று எண்ணூர், காசிமேடு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மெரினாவைப் போல் வடசென்னை கடற்கரைகளை அரசு கண்டு கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதனிடையே திருவொற்றியூர் அருகே கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கே.ஆர். ராமசாமி தெருவில் இருந்து கிளிஜோசியம் நகர் வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் பாதையை சென்னை மாநகராட்சி அமைப்பு வருகிறது. இது கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications