கிடுகிடு கிளாம்பாக்கம்.. சென்னையே பிஸி..மாதவரம் ரெட்டேரியில் விழுந்த நியூஸ்.. சுழலும் ஆபீசர்ஸ்.. செம
சென்னை: இந்த முறை, வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வினை, தமிழக தலைமைச் செயலாளர் முன்னெடுத்துள்ளார்.
இந்த முறை வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.. இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது:

வானிலை மையம்: "வழக்கமாக, தென்மேற்கு பருவமழை தமிழக பகுதியில் விலகி இருக்க வேண்டும்... கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வலுப்பெற்று இருக்க வேண்டும்.. தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் பரவலாக மழை பெய்திருக்க வேண்டும்' என்பன போன்ற நிகழ்வுகள் அடிப்படையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
அக்டோபர் 13 முதல் 27ம் தேதி வரையிலான நாட்களில் எப்போது பருவமழை தொடங்கினாலும் அது வழக்கமான நாளாகவே கருதப்படும்... காரணம், இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. அதனால் இந்த வருடம் சற்று தாமதமாக, அதாவது அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் தகவல்: வானிலை மைய அறிவிப்பு இவ்வாறு இருந்தாலும், வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முன்கூட்டியே தயாராகிவிட்டது.. இதுகுறித்த ஆலோசனை கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. அதன்படியே, தமிழக தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார்.
இன்றுகூட, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும், தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை செயலாளர்: தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளை கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ். ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ரெட்டேரி: அதேபோல, பருவமழைக்கு முன்னதாக மாதவரம் ரெட்டேரியில் கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வலியுறுத்தியிருக்கிறார்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications