Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இன்று முதல் டிச. வரை 1,000 இடங்களில் ’ஞாயிறு’ மருத்துவ முகாம்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ50 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டம் நவம்பர் 4-ந் தேதி தொடங்கப்படும். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

North East Monsoon: TN Govt to launch Health camps from Today

நல்நாட்கள் நிதி உதவி எனும் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4-5 மாத கர்ப்பிணிகளுக்கு ரூ1,000; 5-6 மாதத்தில் 2-வது தவணையாக ரூ1,000, 9-வது மாதத்தில் 3-வது தவணையாக ரூ1,000 நிதி உதவி வழங்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் ரூ5,000 வழங்கப்படும். மொத்தம் 8,163 பேருக்கு இந்த நிதி உதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,294 பேருக்கு மொத்தம் ரூ50 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல் குறித்து வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீடு திட்டம் குறித்த புகார்களை மருத்துவமனைகளில் மருத்துவர்களிடமே தெரிவிக்கலாம்.

North East Monsoon: TN Govt to launch Health camps from Today

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆகையால் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்படுகின்றன. இந்த மருத்துவ முகாம்கள் அக்டோபர் 29-ந் தேதி முதல் டிசம்பர் வரை செயல்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 இடங்களில் இந்த மருத்துவ முகாம் செயல்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

North East Monsoon: TN Govt to launch Health camps from Today

முன்னதாக 'நடப்போம்... நலம் பெறுவோம்' 8 km Health walk, பொது சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை துணை இயக்குனர்கள் மற்றும் நகர நல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கின. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 10 வாரங்கள் இந்த மருத்துவ முகாம்கள் செயல்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+