சென்னையில்.. பீகாரைச் சேர்ந்த தொழிலாளியை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்த கொள்ளை கும்பல்
கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுராஜை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர்.
சென்னை: சென்னையில் வட மாநில இளைஞரை தாக்கி செல்போன் பறித்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதை போன்ற வீடியோக்களை பகிர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, பீகார் பாஜகவின் சமூக ஊடகப்பிரிவினர்தான் அதிக அளவில் இந்த பொய் செய்திகளை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதில் பணிபுரியும் நபர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எல்லாவற்றும் மேலாக, வட மாநிலத்தவர்கள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது ஒரு பக்கம் என்றால் கொள்ளை கும்பலால் வட மாநில இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் சுராஜ் குமார் (26). பீகாரை சேர்ந்தவரான இவர், நேற்று இரவு பணி முடித்துவிட்டு நண்பர்களுடன் தான் தங்கியிருக்கும் இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடப்பேறியை சேர்ந்த சிலர், அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 2 செல்போன்களை அந்த கும்பல் பறித்ததாக கூறப்படுகிறது. இதை சுராஜ் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து சுராஜை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதில் சுராஜின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ரவுடிகளை தேடி வருகின்றனர்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ












Click it and Unblock the Notifications