முன்பு வீட்டின் கதவை உடைத்து திருடுனாங்க..இப்போ செல்போன் மூலமாக எல்லாம் நடக்குது..டிஜிபி வார்னிங்!
முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர் என்று டிஜிபி சைலேந்திர பாபு பேசியுள்ளார்.
சென்னை: முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை எத்திராஜ் கல்லூரியில் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சைபைர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு பேசியதாவது:-

போன் மூலமாகவே எல்லாவற்றையும்..
தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்.

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்
சைபர் பாதுகாப்பு நன்றாக இருக்க வேண்டும் எனில் மாணவர்களாகிய நீங்கள் அதை நன்றாக படிக்க வேண்டும். லிங்க் என்றாலே அது ஆபத்துதான். எனவே அதுபற்றிய விழிப்புணர்வு அவசியம். தமிழ்நாட்டில் காவல் உதவி என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 வகையான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அதைக்கூட பலரும் இன்னும் டவுன் லோடு செய்யவில்லை. உங்களுக்கு ஆபத்து என்றால் டச் பண்ணினால் போதும் பக்கத்தில் இருக்கும் காவல்துறையினர் வந்து காப்பாற்றுவார்கள்.

கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்
சீனாவில் 5 கோடி ஹேக்கர்கள் இருக்கின்றனர். நமது நாட்டிற்கு அதிக பயிற்ச்சி பெற்ற கணினி மென்பொறியாளர்கள் வல்லுனர்கள் தேவைப்படுவார்கள். தேவைப்படுகிறது. அதை நீங்கள் கற்றுக்கொண்டால் கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உலகில் மிகப்பெரிய சொத்து என்பது படிப்பை விட வேறு எதுவும் கிடையாது. நீங்கள் இளமையாக உள்ளீர்கள். அதுவே உங்களுக்கான மிகப்பெரிய சொத்து. இளமையில் நல்ல விஷயங்கள் அனைத்தையும் கற்க வேண்டும்.

முழுமையாக பயன்படுத்த வேண்டும்
'ஹெலன் கெல்லர்' பல அருமையான புத்தங்கள் எழுதியிருக்கிறர். அவருக்கு கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது. வாழ்க்கை என்பது மாபெரும் சாகசம், அது சாகசம் என்று நினைக்க அதில் ஒன்றுமே இல்லை. ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications