செப்டம்பர் 2ஆம் தேதி சென்னைக்கு வாங்க! என்.ஆர்.இளங்கோ விடுத்த அழைப்பு! ஒன்றுகூடும் திமுக லீகல் டீம்!
சென்னை: திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளை செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை வருமாறு அந்த அணியின் செயலாளரும், பிரபல வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக வழக்கறிஞர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி விவாதிக்கவும், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்யவும் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து என்.ஆர். இளங்கோ விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 2.9.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி அளவில், சென்னை, எழும்பூர், இம்பிரீயல் ஓட்டலில் உள்ள "ஃபயஸ் மகாலில்", எனது தலைமையில், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - - துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - எஸ்.ரகுபதி - சேகர்பாபு தயாநிதிமாறன், - சட்டத்துறைத் தலைவர் விடுதலை ஆகியோர் சிறப்புரையாற்றிட நடைபெறும்.''
''இக்கூட்டத்தில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - தலைமைக் கழக வழக்கறிஞர்கள் மற்றும் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.''
பொருள்:
''1. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா.
2. புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் - புதுப்பித்தல்
3. புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் - குறித்து''.












Click it and Unblock the Notifications