பாஜகவை சீமான் விமர்சிப்பதில்லை.. பெரியாரின் வெங்காயம் செய்தது என்ன தெரியுமா? திருமாவளவன் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியாரின் வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை நுழையவிடாமல் தடுத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியாரை விமர்சிக்கும் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், பாஜகவை விமர்சிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே சீமானின் கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

seeman periyar thirumavalavan

அப்போது, பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, நான் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

அதில் திருமாவளவன் பேசுகையில், பரபரப்புக்காக சீமான் ஏதேதோ பேசுகிறார். இது கருத்தியல் பொருத்தமோ, அரசியல் பொருத்தமோ, காலப் பொருத்தமோ இல்லாத ஒன்று. கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி வரும் இளைஞர்களை, அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேசி கொண்டிருக்கிறார்.

பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் காத்து கொண்டிருக்கிறது. அதே வெங்காயம் தான் சனாதன சக்திகளை இங்கு நுழையவிடாமல் விரட்டியடித்து கொண்டிருக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் சமூக நிதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான தலைவர். சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமான அனைத்தையும் அணுகக் கூடிய ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனை அவர் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் பேசவும், விவாதிக்கப்படவும் உள்ளது. வக்ஃப் வாரிய மசோதாவை கொண்டு வந்துள்ள பாஜக பற்றி சீமான் பேசவில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்தக் கூடிய மத்திய அரசை பற்றி பேசவில்லை. தலித் மக்களுக்கு எதிரான படுகொலையை பற்றி பேசுவதில்லை. தமிழீழ விடுதலை அரசியலையும், தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது பொருத்தமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+