பாஜகவை சீமான் விமர்சிப்பதில்லை.. பெரியாரின் வெங்காயம் செய்தது என்ன தெரியுமா? திருமாவளவன் பதிலடி!
சென்னை: பெரியாரின் வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை நுழையவிடாமல் தடுத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியாரை விமர்சிக்கும் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், பாஜகவை விமர்சிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே சீமானின் கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது, நான் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
அதில் திருமாவளவன் பேசுகையில், பரபரப்புக்காக சீமான் ஏதேதோ பேசுகிறார். இது கருத்தியல் பொருத்தமோ, அரசியல் பொருத்தமோ, காலப் பொருத்தமோ இல்லாத ஒன்று. கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக தன்னை நம்பி வரும் இளைஞர்களை, அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேசி கொண்டிருக்கிறார்.
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது. அந்த வெங்காயம் தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகளை வேரூன்ற விடாமல் காத்து கொண்டிருக்கிறது. அதே வெங்காயம் தான் சனாதன சக்திகளை இங்கு நுழையவிடாமல் விரட்டியடித்து கொண்டிருக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் சமூக நிதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான தலைவர். சர்வதேச அளவில் அறிவியல்பூர்வமான அனைத்தையும் அணுகக் கூடிய ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய தலைவர். அவரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இதனை அவர் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் பேசவும், விவாதிக்கப்படவும் உள்ளது. வக்ஃப் வாரிய மசோதாவை கொண்டு வந்துள்ள பாஜக பற்றி சீமான் பேசவில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்தக் கூடிய மத்திய அரசை பற்றி பேசவில்லை. தலித் மக்களுக்கு எதிரான படுகொலையை பற்றி பேசுவதில்லை. தமிழீழ விடுதலை அரசியலையும், தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது பொருத்தமில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications