Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்! ஆதவ் அர்ஜுனா நேரில் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள், திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி, தங்கள் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Kilambakkam TVK

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி செய்து, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு முடித்த செயலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாலை 6 மணி ஆனதை தொடர்ந்து செவிலியர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் அருகே பேருந்தில் அழைத்து சென்று விடுவித்தனர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவில் தர்னாவில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்ட களத்திற்கு வந்த தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில், செவிலியர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+