Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிரித்த ஹைகோர்ட்.. கலங்கிய ஓபிஎஸ்.. ஆதரவாளர்களுடன் பரபரப்பு ஆலோசனை.. அடுத்த அஸ்திரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Recommended Video

    எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! - ஜுனியர் எம்ஜிஆர்

    அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மிகவும் தீவிரமாக இருக்கிறது. சட்டசபையில் திமுகவை ஓபிஎஸ் புகழ்ந்தது, அவரது மகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓபிஎஸ்ஸுடனான இரட்டை தலைமை வேண்டாம் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

    இந்த நிலையில் கட்சியை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என ஓபிஎஸ் விரும்புகிறார். இதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த முறை பொதுக் குழு நடந்த போது கோர்ட் கதவுகளை தட்டினார்.

    தோல்வி

    தோல்வி

    ஒரு வகையில் அவருக்கு தோல்வி கிடைத்தாலும் ஓபிஎஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. அப்போது 23 தீர்மானங்களையும் பொதுக் குழு நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    பொதுக் குழு

    பொதுக் குழு

    அத்துடன் பொதுக் குழுவுக்கு வந்தது முதல் ஓபிஎஸ் எடப்பாடி தரப்பினரால் அவமானப்படுத்தப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றார். அங்கு பிரதமரை சந்திக்க முயற்சித்தார். ஆனாலும் நேரம் கிடைக்கவில்லை. இதையடுத்து நேராக சென்னை வந்தார். பின்னர் பெரியகுளம் சென்ற போது தேனியில் பாஜகவினர் அவருக்கு காவித் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    இதையடுத்து அடுத்த நாளே தலைமை கழக நிர்வாகிகள் குழு கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டியது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ்ஸை துரோகி என காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு ஜூலை 11 ஆம்தேதி கூடும் என எடப்பாடி தரப்பினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

    பொதுச் செயலாளர் எடப்பாடி?

    பொதுச் செயலாளர் எடப்பாடி?

    இந்த பொதுக் குழுவில் வைத்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பொதுக் குழுவை தடுக்க ஓபிஎஸ் தரப்பு ஆர்வம் காட்டினர். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை அவசரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4-ல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

    பரபரப்பு ஆலோசனை

    பரபரப்பு ஆலோசனை

    இது ஓபிஎஸ் தரப்புக்கு லேசான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் கலக்கமடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்து வருகிறார். வைத்திலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+