நம்பர் 2வா.. செய்து பாருங்கள்.. என் வண்டி எங்க போகும் தெரியும்ல?.. ஓபிஎஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றைத் தலைமை என்ற பேச்சை எடுத்தால் அடுத்த நாளே நான் என்ன செய்வேன் என்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியதை அடுத்து எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    #AIADMK ஒற்றைத்தலைமை விவகாரம்..என்ன நடக்கிறது? #EPS #OPS

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் நாளுக்கு நாள் டிரென்டாகி வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒற்றைத் தலைமை இருவரும் விட்டுக் கொடுக்கக் கூடாது என பரஸ்பர ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இதனால் அதிமுக யாருக்கு போய் சேரும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம்பிடித்தவர்.

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சிக்கு எந்த பிரச்சினை என்றாலும் கட்சியையும் ஆட்சியையும் ஓபிஎஸ்ஸிடம்தான் ஜெயலலிதா ஒப்படைப்பார். ஆரம்பத்தில் நகர்மன்ற சேர்மேனாக இருந்து தனது விசுவாசத்தால் முதல்வர் பதவி வரை வந்தவர் ஓபிஎஸ்.. அவரை அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கட்சியை கைப்பற்ற நினைப்பதாக தகவல்கள் வருகின்றன.

    ஒற்றைத் தலைமை

    ஒற்றைத் தலைமை

    ஆனால் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து நடுநிலை வகிக்கும் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் ஒன் இந்தியா சார்பில் அணுகினோம். அவர்கள் கூறுகையில் "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது எடுபடாது என ஓபிஎஸ் கருதுகிறார்.

    இரட்டை தலைமை

    இரட்டை தலைமை

    தற்போதுள்ளது போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டை தலைமையே போதும். கட்சியை பலப்படுத்த ஒற்றுமையாக இருக்கலாம் என்கிறார். ஒரு வேளை தனக்கு அவைத் தலைவர் பதவி, தலைமைக் கழக தலைவர் பதவி உள்ளிட்டவற்றை கொடுத்து 2ஆம் கட்ட தலைவராக்க நினைத்தால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஓபிஎஸ் , எதிர்தரப்பை எச்சரித்தார்.

    இரண்டாம் கட்ட தலைவர்

    இரண்டாம் கட்ட தலைவர்

    தனக்கு கட்சிதான் முக்கியம் என்பதால் இரண்டாம் கட்ட தலைவராக இருப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை சீண்டி பார்க்க நினைத்தால் நான் சசிகலாவை அடுத்த நிமிடமே சந்திப்பேன். அவரிடம் ஒப்படைக்க வேண்டியதை ஒப்படைத்துவிடுவேன், பார்த்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சசிகலாவுக்கு ஆதரவு

    சசிகலாவுக்கு ஆதரவு

    மேலும் தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாம் தன் பின்னால் வந்துவிடுவார்கள், ஏற்கெனவே சசிகலா தலைமையை விரும்பும் தொண்டர்களும் வருவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு அதிரடியாக இறங்காமல் சற்று நிதானமாகவே அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்கிறது" என நடுநிலைவாதிகள் தெரிவித்தனர்.

    ஆறுமுகசாமி ஆணையம்

    ஆறுமுகசாமி ஆணையம்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆஜரானார். அப்போது அவரிடம் சசிகலா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரை சின்னம்மா என்று குறிப்பிட்டே பதில் அளித்தார். மேலும் சசிகலா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் அபிமானமும் மரியாதையும் இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+