“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு!
தேனி: "யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார்? யாரால் பதவி பெற்றார்? சிறை செல்ல இருந்த அவரை, செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர் என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்." என முன்னாள் முதல்வரும் போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "இன்றைய அரசியல் சூழலில் திமுகவில் நான் இணைந்ததை அனைவரும் வரவேற்கின்றனர். அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை பெற்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவமிக்க ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்பதால் தான்.
அவரது தலைமையில் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இதுவரை யாரும் வெளியேறினார்கள் என்ற நிலை இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனக்குத் தானே கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் தலைவர் என்று உருவாக்கிக் கொண்டு கூறி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிஅரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக உள்ளார். அவருக்கு படுதோல்வி உறுதி. ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது. கலைஞரை பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை. அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழக மக்களுக்கு சமூக நீதியை பெற்றுக் கொடு்த்தவர் கலைஞர். அத்தகைய தலைவர் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார், யாரால் பதவி பெற்றார்? சிறை செல்லவிருந்த எடப்பாடி பழனிசாமியை செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர். உலகில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி மட்டுமே. எந்த நேரத்தில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாரோ, அப்போது முதல் அதிமுக தொடர் தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறது." என்றார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!











Click it and Unblock the Notifications