தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட கூட்டணி, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தேமுதிக அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தென் மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் டார்கெட்டுடன் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் கடையநல்லூர் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். (O Panneerselvam)

ஓபிஎஸ் பிரச்சாரம்
கடையநல்லூர் ஒன்றியம், அச்சன்புதூர் பண்பொழி பேரூர் பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார். குருவிக்குளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களில் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை 3 தொகுதிகள்
நாளை மார்ச் 14 ஆம் தேதி காலை 9 மணியளவில் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஒட்னறியங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மாலை 4 மணியளவில் முதுகுளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அங்கு கடலாடி, கமுதி, முதுகளத்தூர் ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
நாளை மாலை 6 மணியளவில் பரமக்குடி (தனி) தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு நயினார்கோவில், பரமக்குடி நகரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை இரவு 8 மணியளவில் திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்கிறார். அங்கு ஆர்.எஸ் மங்கலம், திருவாடனை ஒன்றியங்களில் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications