10 நிமிடம்தான்.. "கிரீன் சிக்னல்" தந்த மோடி! கை கூப்பியபடி ஏர்போர்ட் போன ஓபிஎஸ்! ஆஹா அப்போ எடப்பாடி?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் மோடி இன்று நேரம் ஒதுக்கினார். இவர்கள் இடையில் 5-10 நிமிடம் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் அஹமதாபாத் செல்கிறார்

நேரம் ஒதுக்கிய மோடி
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கினார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவரை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் முயற்சி எடுப்பார் என்று முன்பே கூறப்பட்டது. நேற்றே இதற்காக அவர் நேரம் கேட்டதாக செய்திகள் வந்தன. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு தரப்பில் இருந்தும் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது.

நேரம் இல்லை
ஆனால் இரண்டு பேருக்குமே இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி நேற்று மாலை ஆளுநரையும், சில பாஜக தலைவர்களையும் மட்டுமே சந்தித்தார். அதிமுக தலைகளை தனியாக சந்திக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்றும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் முயன்று இருக்கிறார். தனக்கு இருக்கும் டெல்லி சோர்ஸ்கள் மூலமும், ஓபி ரவீந்திரநாத் எம்பி மூலமும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

10 நிமிடம்
இந்த விழா முடிந்த பின் 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மோடி அஹமதாபாத் செல்கிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து மோடியை சந்திக்க 10 நிமிடம் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தரப்பும் இதற்கான நேரத்தை ஓ பன்னீர்செல்வத்திற்கு வழங்கி உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிமுக அரசியல் விவகாரங்கள், எடப்பாடி உடனான மோதல் குறித்து ஓ பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது,

என்ன நடந்தது
வெளியே நின்ற செய்தியாளர்களை சந்திக்காமல்.. கையை கூப்பியபடி காரில் ஓ பன்னீர்செல்வம் விமான நிலையம் உள்ளே சென்றார். உள்ளே அவர் பிரதமர் மோடியுடன் 5-10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி உடனான மோதல் குறித்து ஓ பன்னீர்செல்வம் பேசியதாக கூறப்படுகிறத. ஓ பன்னீர்செல்வம் உடல்நிலை பற்றி மோடி விசாரித்து உள்ளார்.

எடப்பாடி ஓபிஎஸ்
நேற்று எடப்பாடியை மோடி தனியாக சந்திக்கவில்லை. இதனால் எடப்பாடி தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மோடி தன்னை சந்தித்தால், அது தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக இன்று ஓபிஎஸ் மோடியை ஒருவழியாக சந்தித்தார். எடப்பாடியை சந்திக்காத மோடி.. என்னை சந்தித்துவிட்டார் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக ஓ பன்னீர்செல்வம் இவ்வளவு பிரயத்தனங்களை செய்ததாக கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications