"நானா.. எதிர்த்தேனா.. வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு சொல்லவே இல்லை".. ஓபிஎஸ் வேதனை
ஓ பன்னீர்செல்வம் வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "வன்னியர் இடஒதுக்கீட்டில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை... வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சில விஷமிகள் தவறான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது" என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது... இதைதான் தங்கள் முதல் கோரிக்கையாக பாமக ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகிறது.
அதாவது 1987 முதலே, எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைக்க, அதனை எம்ஜிஆரும் ஏற்று கொண்டதாக தெரியவில்லை. எனினும் பாமகவின் கோரிக்கை தொடர்கிறது.

பாமக
இப்போது கொரோனா தொற்று இன்னும் குறையாததையும் பொருட்படுத்தாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில், மறுபடியும் இந்த கோரிக்கையை பாமக வலியுறுத்தி சென்னையில் போராட்டமும் செய்தது.. அந்த போராட்டம் பாமகவுக்கே மைனஸாகிவிட்டது.. பொதுமக்கள் பாதிப்பு., ரயில் மீது கல்வீசி தாக்குதல் என கெட்ட பெயர்களை பாமக ஒரே நாளில் எடுத்து கொண்டது.

அதிமுக
இந்த சூழலில் அதிமுக கூட்டம் ஒன்று நடந்தது.. அப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டாம் என்றும், இவர்களுக்கு கொடுத்தால் மற்றவர்களும் வந்து நிற்பார்கள்.. பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்துவிட்டாலும், மற்ற சமுதாய மக்களின் ஓட்டுகள் வராது என்று ஓபிஎஸ் அந்த கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது.. இது உண்மையா என்றும் தெரியவில்லை.. எனினும், இந்த பேச்சு குறித்து சோஷியல் மீடியாவில் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான கருத்துக்களும் பரவின.

வன்னியர்கள்
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ட்வீட்
எனினும், இந்த ட்வீட்டுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் திரண்டு வந்து கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.. அதில், நேரடியாக சிலர் கோரிக்கை விடுத்து, ஐயா எங்களுக்கு இடஒதுக்கீடுக்கு வழிவகை செய்யுங்கள் என்று கோரிக்கைகளை விடாமல் விடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications