நாளை கடல் கொந்தளிக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!
ஃபனி புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட கடல்களில் நாளை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: ஃபனி புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட கடல்களில் நாளை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஃபனி புயல் நாளை அதிதீவிர புயலாக மாற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் ஏமாற்றம் அளித்து உள்ளது. இந்த புயல் தற்போது தமிழகத்தை நோக்கி வந்தாலும் நாளை இது திசை மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எப்படி இருக்கும்
இந்த புயலால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் சென்னையில் கடலோர பகுதிகளில் மட்டும் வேகமாக காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை இந்த புயல் காரணமாக 70கிமீ முதல் 85 கிமீ வரை வேகமாக காற்று வீச வாய்ப்பு இருக்கிறது.

வாய்ப்பு
இதனால் நாளை கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய அனைத்து கடல்களும் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை மீனவர்கள்
இதையடுத்து நாளை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாளை காற்றின் வேகத்தை பார்த்துவிட்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை மெரினா
நாளை மட்டுமின்றி நாளை மறுநாளும் கடல் கொந்தளிப்பாகத்தான் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் பெரிய அலைகள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள், மெரினாவை காண செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications