அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விழா - நாளை கிராம சபை கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவு
சென்னை: காந்தி ஜெயந்தி தினமான நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அனைத்து கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அக்டோபர் 2ஆம் காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தவும், அனைத்து கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்ள ஏதுவாக இடம் மற்றும் நேரத்தை கிராம மக்களுக்கு அறிவிக்க வேண்டும். கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது கிராம சபை கூட்டம் நடத்தலாம் எனவும் கொரோனா பரவல் உள்ள பகுதிகளை பொறுத்து கிராம சபை கூட்டத்தை வேறொரு நாளில் நடத்தி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications