அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய மாரத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்
சென்னை: தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், அரசு மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டம், வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட ட்வீட்டில், நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிமுக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களை உடனே அழைத்து, அக்கறையுடன் பேசி அவர்களின் கோரிக்கையை முறையாக உடனடியாகப் பரிசீலனை செய்து நிறை வேற்றவும், அசவுகரியங்களுக்கு உள்ளாகியிருக்கும் உள்நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அவசரகால சிகிச்சைக்காக வருவோரின் சிரமங்களைப் போக்கி, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காலை முதல், 6 மணி நேரம் நடத்திய, பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், கோரிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரியை, நியமனம் செய்வதாக இரவு 8 மணியளவில் அறிவித்தது தமிழக அரசு.
2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் செந்தில் ராஜ் ஆய்வு செய்வார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊதிய உயர்வு கோரிக்கையை 2 மாதத்தில் நிறைவேற்றி தர எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இரவில் மீண்டும், தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர்.
6 வாரங்களுக்குள், ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரும் என்று விஜயபாஸ்கர் அப்போது உறுதிமொழியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், 4 நாட்கள் நீடித்து வந்த அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications