அமைச்சர் கையில் முத்தம்.. நெற்றியில் சிலுவையிட்டு ஆசி.. கூடவே குட்டி கோரிக்கை.. போரூரில் கலகலப்பு
அமைச்சர் பெஞ்சமினுக்கு முத்தம் தந்து பாட்டி கோரிக்கை வைத்தார்.
Recommended Video

சென்னை: ஆய்வு செய்ய வந்த அமைச்சர் தனக்கு இப்படி ஒரு திடீர் முத்தம் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் அரசு சென்னை சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2252 விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

நேரில் பார்வையிட்டார்
இதன் பின்னர் ராமாபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ராமாபுரம் ஏரி மீட்கப்பட்டு அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அதனை பார்வையிட அமைச்சர் சென்றார். அப்போது ஏரியை சுற்றிலும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கவும் உத்தரவிட்டு கொண்டிருந்தார்.

கையில் முத்தம்
அப்போது ஒரு பாட்டி, அங்கு தள்ளாடியபடியே வந்தார். நின்றுகொண்டிருந்த அமைச்சரின் இரண்டு கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார். பிறகு படார் என கையில் முத்தம் கொடுத்தார். பிறகு அமைச்சரை மனசார ஆசீர்வாதம் செய்தார். இதனால் அமைச்சர் உட்பட அங்கிருந்தவர்கள் யாருக்குமே ஒரு செகண்ட் எதுவுமே புரியவில்லை.

முக்கிய பிரமுகர்கள்
அமைச்சரின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட பாட்டி, "எங்கள் ஏரியாவில் தண்ணியே வர்றது கிடையாது" என்று சொல்லி, அமைச்சரை கையோடு அழைத்து கொண்டு சென்றார். அமைச்சர், பாட்டி பின்னாடியே, எம்எல்ஏ அலெக்சலாண்டர், முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சென்றனர்.

தண்ணி வரல
பாட்டி அமைச்சரை தன் வீட்டுக்கு அருகே கூட்டி வந்து, அங்கிருந்த குழாயடிகளை காண்பித்து "தண்ணீர் எப்பவுமே வராம ரொம்ப கஷ்டப்படறோம்" என்றார். உடனே அமைச்சரும், சரி, சீக்கிரமா உங்களுக்கு தண்ணி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னதும், பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

விரைவில் ஏற்பாடு
அதனை பார்த்த அமைச்சர் விரைந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து அந்த மூதாட்டி சந்தோசமாக நடந்து சென்றார். இதில் எம்.எல்.ஏ அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன், கா.சு.ஜனார்த்தனன் உட்பட அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications