பீக்கை கடந்துவிட்டோமா! தமிழ்நாட்டில் 2 நாட்களாக நடக்கும் மாற்றம்.. இன்று எத்தனை பேருக்கு கொரோனா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 23443 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 20 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 37009 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 152358 பேர் தமிழ்நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 140268 மாதிரிகள் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. 59688723 மாதிரிகள் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று 13551 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2774009 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெஸ்டிங் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் புதிய கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இரண்டு கேஸ்கள்
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. 20 நாட்கள் தொடர்ந்து உயர்ந்த கேஸ்கள் 2 நாட்களாக சரிந்து வருகிறது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா உச்சம் கடந்துவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
17 ஜனவரி: 23,443
16 ஜனவரி: 23,975
15 ஜனவரி: 23,989
14 ஜனவரி: 23,459
13 ஜனவரி: 20,911
12 ஜனவரி: 17,934
11 ஜனவரி: 15,379
10 ஜனவரி: 13,990
09 ஜனவரி: 12,895
08 ஜனவரி: 10,978
07 ஜனவரி: 8,981

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் இதுவரை 241 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் 231 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகமாக 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 8591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 60126 பேர் சென்னையில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் புதிய ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 241 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் 231 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகமாக 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 8591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 60126 பேர் சென்னையில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் புதிய ஓமிக்ராம் கேஸ்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

மற்ற மாவட்டங்கள்
கோயம்புத்தூரில் 2042 பேர் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். கோவையில் 10147 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2236 இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கு 16546 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் இன்று 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கோவையில் ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 2 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications