கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதமே சவால் விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதமே சவால் விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை.
இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது. ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பெஞ்ச் விசாரிக்கிறது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்று ப. சிதம்பரம் அரசால் மிக மோசமாக நெருக்குதலுக்கு உள்ளாகிறார். ஆனால் இதை கடந்த மார்ச் மாதமே பிரதமர் மோடி சவாலாக விடுத்து இருந்தார். ஆம் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது அவர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.

என்ன புத்திசாலி
மோடி தனது பேச்சில், புகழ்பெற்ற மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினரை இழிவு படுத்தி பேசி வருகிறார். அவர் மக்கள் பணத்தை கொள்ளை அடித்துவிட்டார். அவருக்கு தான்தான் புத்திசாலி என்று நினைப்பு இருக்கிறது. மற்றவர்கள் செய்வதை விமர்சனம் செய்வதே அவரின் வேலை.

என்ன கட்சி
தனது கட்சி தலைமையை போலவே அவரின் குடும்பமும் ஊழல் குடும்பம். தற்போது குடும்பத்துடன் அந்த முன்னாள் அமைச்சர் ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் ஏறி இறங்கி கஷ்டப்படுகிறார். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.

இல்லை
ஒருபோதும் நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன். நாட்டில் ஊழல் செய்தவா்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். அந்த முன்னாள் அமைச்சரும் பதில் சொல்வார் என்று சவால்விட்டு இருந்தார். தற்போது அதே போல மத்திய அரசின் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்திற்கு செக் வைத்து இருக்கிறது. மோடி சொன்னது போலவே அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications