2 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி.. சென்னை வண்ணாரப்பேட்டையில் சோகம்
சென்னை: 2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என் என் கார்டன் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகீர். இவர் மனைவி மும்தாஜ். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

சையது அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் ஒன்றரை வயதான இர்பான் வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் விளையாடி கொண்டு இருந்தான்.
அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இர்பான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான்.
உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இர்பான் உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications