"வெடிகுண்டு வைச்சு இருக்கேன்!" போதையில் முதல்வர் வீட்டிற்கே வெடிகுண்டு மிரட்டல்.. தூக்கிய போலீசார்
சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் உள்ள முன்னணி பிரபலங்கள் வீட்டிற்குப் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
இதில் சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்யும் போலீசார் சில சமயங்களில் கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். சில சமயம் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.

இதனிடையே நேற்று நள்ளிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து உடனடியாக அலர்ட் ஆன போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டலும் போலி எனத் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கிய ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, இதேபோல நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் கஞ்சா போதையில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications