90 மணி நேர வேலைனு சொன்ன எல்&டி சுப்பிரமணியனா சொல்றது! மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு
சென்னை: பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல் அன்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் புழுவாய் துடித்து போகிறார்கள். மன அழுத்தம், அடி வயிற்று வலி, தொடைகளில் குடைச்சல், இடுப்பில் ஒரு வித அதீத வலி, வாந்தி வருவது போன்று உணர்வு, உடல் வலி என வந்து 4 நாட்களுக்கு பாடுபடுத்தி விடுகிறது.

இந்த 4 நாட்களில் பெரும்பாலானோருக்கு உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு முதல் நாள் அல்லது இரண்டாவது நாள் மட்டும் வலி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று ஓய்வெடுத்து ஓய்வெடுத்து தங்கள் வலியை சரிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துக் கொண்டே இருக்கும் என்பது வேறு விஷயம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்த வலி வேதனையுடனேயே செல்ல வேண்டி இருக்கிறது. இதற்காகத்தான் பெண்கள் நலம் போற்றும் வகையில் மாதத்தில் ஒரு நாள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை பல்வேறு நிறுவனங்கள் கையில் எடுத்து வருகிறார்கள்.
லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எஸ்.என்.சுப்பிரமணியன். இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது இதற்கான அறிவிப்பை நாளை பெண்கள் தினத்தையொட்டி அவர் வழங்கவுள்ளார். இதன் மூலம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பிரிவின் கீழ் பணிபுரியும் 5 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள்.
இந்த ஒரு நாள் மாதவிடாய் விடுப்பானது தாய் நிறுவனமான எல் அன்ட் டியின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிதி சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அதன் துணை நிறுவனங்களுக்கு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஆயிரம் ஊழியர்களில் 5 ஆயிரம் பெண் ஊழியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வளவு நேரம்தான் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்" என எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் அண்மையில் கேட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் பீகார், ஒடிஸா, சிக்கிம், கேரளா ஆகிய 4 மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளன. ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பு அறிவித்திருந்தன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications