"சுதந்திர இந்தியாவில் முதல் முறை.." மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்பட வாய்ப்பு- ஷாக் சர்வே
சென்னை: ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் துவங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் கூட, சிறு குறு தொழில் நிறுவனங்களில் மூன்றில் ஒன்று மூடப்பட கூடிய சூழ்நிலையில், இந்தியா இருப்பதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் (AIMO) மேலும் 9 தொழில்துறை அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மொத்தம் 46 ஆயிரத்து 525 தொழில் முனைவோரிடம் எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்களை சேர்ந்த 35% பேர் மற்றும் சுயதொழில் செய்வோரில் 37% பேர் தங்கள் தொழிலை இனிமேல் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
32 சதவீதம், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நிலைமை மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெறும் 12% பேர் மட்டுமே மூன்று மாதங்களுக்குள் நிலைமை சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாதிப்புகள்
உற்பத்தி அளவு குறைவாக இருப்பது, எதிர்காலத்தில் ஆர்டர்கள் வருமா என்பது கேள்வி குறியாக இருப்பது போன்றவை இந்த பிரச்சினைகளில் முக்கியமானவையாகும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமே தொழில்கள் தொடங்குவதற்கு காரணமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பாதிப்பு இருந்தது
"ஏற்கனவே போதிய அளவுக்கு பணப்புழக்கம் இல்லாமல் வணிகர்கள் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், பணமதிப்பிழப்பு மற்றும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவை கடந்த மூன்று வருடங்களாக தொழில் நசிவு அடைவதற்கான காரணம். இந்த பிரச்சனைகளுடன் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இணைந்து கொண்டுள்ளது" என்கிறார் அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரகுநாதன்.

சுதந்திரம் பெற்ற பிறகு
சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான ஒரு மிகப்பெரிய தொழில் நசிவு நிலைமை வந்தது கிடையாது என்றும் அவர் தெரிவிக்கிறார். உலகத்திலேயே மிகவும் கடுமையான லாக்டவுன் நடைமுறை என்பது இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாவது கட்ட ஊரடங்கு காலகட்டத்தின்போதுதான் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது மே 17ஆம் தேதிக்கு பிறகு.

பாதிப்பு இல்லை
இந்தியாவில் முக்கியமான தொழில் துறை மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவைதான். ஆனால், இந்த மாநிலங்களில் அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவும் தொழில்துறை முடக்கத்திற்கு ஒரு காரணம். இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றதில் மூன்று சதவீத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், 6 சதவீத கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் 11% சுய தொழில் செய்வோர் தாங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றும், தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய கூடிய பிரிவில் வருபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications