Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1% ரிசர்வேஷன்.. 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட் முக்கிய அறிவிப்பு

3ம் பாலினத்தவர் பணியிடங்கள் குறித்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தலைமைப் பதிவாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கவில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மோசடிகளின் கூடாரம்... நீட் தேர்வை ரத்து செய்யனும்.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

 ஹைகோர்ட்

ஹைகோர்ட்

இவர் 'திருநர் உரிமை கூட்டியக்கம்' சார்பில் பல சட்டப் போராட்டங்களை நடத்தி மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பெற்று கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கிரேஸ் பானு, "மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..

 ஒரு சதவீதம்

ஒரு சதவீதம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவிலை.. எனவே, தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

 விசாரணை

விசாரணை

சமீபகாலமாகத்தான், 3ம் பாலினத்தவர்கள் போராடி கல்வி பெற்று ஓரளவு நல்ல நிலைமைக்கு முன்னேறி வர ஆரம்பித்துள்ளனர்.. ஒருவேளை இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் அது பேருதவியாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.. கிரேஸ் பானு தாக்கல் செய்த இந்த மனுவானது, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இப்பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதாகவும், ஆனால் மூன்றாம் பாலினத்தவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு கோர இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என உத்தரவிட்டனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+