ஆதார்+வாக்காளர் அட்டை.. மீதமிருக்கும் பாதி கிணறு! மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கியது மத்திய அரசு
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை தனிநபரின் அடையாளத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு என்று வந்ததுதான் ஆதார். முதலில் இது கட்டாயமில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஆதார் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதர் எண்ணுடன்-பான்-வாக்காளர் அட்டை போன்றவை இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று யோசனையை மத்திய அரசு முன்மொழிந்தபோது, அதனை காங்கிரஸ் கடுமைாயாக எதிர்த்தது. இதனையடுத்துதான் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது முக்கியமானதாகும். இதனையடுத்து இப்பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

எதிர்ப்பு
பல இடங்களில் இப்பணிகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய பகுதிகளில் விளக்க கூட்டம் போட்டு பின்னர் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பு சில இடங்களில் எழுந்த நிலையில், இந்த இணைப்பு கட்டாயமில்லை என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியிருந்தார். ஆனால் தற்போது இது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தொடங்கிய இந்த பணியானது 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

கட்டாயம்
ஆனால், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்மாலான மக்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் அனைவரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் எனும் செல்போன் ஆப் மூலமாகவும் இவ்வாறு இணைத்துக்கொள்ளலாம்.

பான் எண்ணும் கூட
இது தவிர வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி சிலை அலுவலர் ஆகியோரிடம் தங்களது ஆதார் எண்ணை கொடுத்து ஆதார் கார்டு-வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆதார்-பான் அட்டையை இணைக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே கெடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிதான் கடைசி தேதி. எனவே பான் எண்ணை ஆதார் என்னுடன் விரைவில் இணைக்க வேண்டும்.

வலியுறுத்தல்
இதை தவறவிட்டால் 10 இலக்க பான் எண் செயலிழந்துவிடும். இதனால் பான் அட்டை கொண்டு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்படும். அதேபோல வரமான வரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது. மேலும் அபராமாக ரூ.1,000 வசூலிக்கப்படும். ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேலும் 6 மாதங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications