ஆன்லைனில் தேர்வுகள்.. சட்டென சொன்ன தமிழக பள்ளிக்கல்வித்துறை.. அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்வது இதுதான்
சென்னை: 6 வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸா? இந்த நடைமுறையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து காலாண்டு தேர்வு இணையவழியாக நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே இணையவழியாக நடத்தவும், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து வினாத்தாள் மூலம் நடத்தவும் தமிழக பள்ளிக்கல்வியின் சார்பில் உத்தரவிடப்பட்டது.
வினாத்தாள்கள்: அதற்கான வினாத்தாள்களும் ஆன்லைன் ஆப் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதை டவுன்லோடு செய்து நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதாவது, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாநிலம் முழுவதற்கும் ஒரே வினாத்தாளில், தேர்வு நடத்தப்படும் நிலையில், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியரின் மொபைல் போனில் செயலி வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.
ஆன்லைன் கிளாஸ்: அதன்படி, ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து, அதில் உள்ள செயலியில் இடம் பெற்று உள்ள, ஆன்லைன் வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இப்படியே, ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வை நடத்த வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும்.

ஆனால், இந்த தேர்வு முறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. காரணம், 6 முதல் 8 வயதுடைய குழந்தைகளான மாணவர்களை, செல்போனை பயன்படுத்தி தேர்வெழுத வைப்பது, அவர்களது எழுத்து திறனை பாதிக்கும். அத்துடன், இணையதள பிரச்னையால், செல்போன் முடங்கிவிடும், மாணவர்கள் அதிக நேரம் செல்போனை பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்..
பரிசீலிக்குமா அரசு: அதனால், இந்த ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை, முக்கிய முடிவு எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் நிலவி வருகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications