ஆன்லைனில்.. வாரிசு சான்றிதழ் ஸ்டேட்டஸ்.. தாலுகா ஆபீசில் சான்றிதழை பெறுவது எப்படி.. ரொம்ப சிம்பிள்
சென்னை: வாரிசு சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், அந்த சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களை அல்லது பணத்தை பெறுவதற்கு பெறப்படும் சான்றிதழ்தான் வாரிசு சான்றிதழ். இது வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
இப்படி வாரிசு சான்றிதழ்கள் இருந்தால், எந்த பிரச்சனையும் சொத்து தொடர்பாக வராது.. வாரிசுகள் அந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.. வாரிசுகளுக்குள் தகராறு வரவும் வாய்ப்பிருக்காது....

ஆவணங்கள்: ஆனால், இந்த வாரிசு சான்றிதழை எல்லாராலும் பெற்றுக்கொள்ள முடியாது.. இறந்த நபரின் கணவன் அல்லது மனைவி, இறந்த நபரின் வாரிசுகள், இறந்த நபரின் பெற்றோர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்..
இந்த சான்றிதழ் இருந்தால்தான், ஓய்வூதியம் பெற முடியும், PF, கிராஜுவிட்டி பெற முடியும்.. கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற முடியும்.. அதுமட்டுமல்ல, நேரடியாக இவருக்குதான், தாம் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும்கூட, சொத்துக்கள், உரிமைகள் விஷயத்திற்கு இந்த சான்றிதழ் மிகவும் முக்கியமானதாக உள்ளது..
இணையதளம்: இந்த வாரிசு சான்றிதழை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி அலுவலகம்/தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.. இப்போது, ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு, www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று, ரிஜிஸ்தர் செய்து கொண்டு, அதற்கு பிறகு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக வாரிசு சான்றிதழ் பெற என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் தெரியுமா?
- விண்ணப்பதாரர் அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.. விண்ணப்பப் படிவத்தை தாலுகா அலுவலகத்தில் பெறலாம் அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவிட்டபிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்..
- 2 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்/ வருவாய் ஆய்வாளர் ஆகியோரை சந்திக்க 2 டோக்கன்கள் தரப்படும்.
- இப்போது, விண்ணப்பதாரர் அந்தந்த படிவங்களில் தகவலை உள்ளிட வேண்டும்.. முதல் படிவத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களும், 2வது படிவத்தில், சரிபார்ப்பதற்காக விண்ணப்பதாரர் 10 குறிப்புகளையும் குறிப்பிட வேண்டும்.
- இந்த அனைத்து விவரங்களையும் பதிவிட்டபிறகு, விண்ணப்பதாரர் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்தையும் பெற வேண்டும்.
- சட்டப்பூர்வ வாரிசுகளை சரிபார்த்த பிறகு, கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய கையெழுத்து மற்றும் முத்திரையை பதிவிடுவார்... இதற்கு பிறகு, இந்த விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.. அதன் பிறகு வருவாய் ஆய்வாளர் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று சரிபார்ப்பார்.
- விண்ணப்பதாரர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் படிவத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து டோக்கன் நம்பரையும் பெற வேண்டும். இந்த டோக்கன் நம்பர் வழங்கப்பட்டவுடன், படிவத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து, 16 நாட்களுக்குள் வட்டாட்சியர் சான்றிதழை வழங்கிவிடுவார்.
வாரிசு சான்றிதழ் நிலையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி தெரியுமா?
- வாரிசு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை நீங்கள் சமர்ப்பித்தபோதே உங்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும்... அந்த ரசீதை வைத்துதான் இதை அறிய முடியும்.
- இதற்காக முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான e-Sevai வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்
- ஸ்கிரீனில் 'Services Offered' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது, "Legal Heir certificate" என்பதை கிளிக் செய்தால், புதிய வெப்சைட் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்
- இறுதியாக, 'Check Status' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications