Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாமரையில் நிற்க நெருக்கடி.. போட்டியிடவே வேண்டாம்.. பின்வாங்கும் ஓ பன்னீர்செல்வம்? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னையில் இன்று நடக்க உள்ள ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது எம்பியாக உள்ள ஓ பி ரவீந்திரநாத் போட்டியிடுவரா? போட்டியிட்டால் எந்த சின்னத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

OPS does not want to run in Lotus under BJP alliance even after getting 4 seats

இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவர் தொடர்ந்து உறுதியாக பேசி வந்தார். ஆனால் தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு குறைவு , தாமரையில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியதாக தெரிகிறது. ஆனால் தாமரையில் போட்டியிட்டால் ஓ பன்னீர்செல்வம் பாஜக பக்கம் சென்றுவிட்டதாக மாறும். அதிமுகவிற்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லாமல் போகும்.

இதனால் லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கூட்டணி; பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாக கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சின்னம் பிரச்சனை காரணமாக லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர். இன்று இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+