அனலைக் கிளப்பும் ஓபிஎஸ்.. பாஜக கூட்டணியை விட்டு வெளியேற முடிவா? இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாஜக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறும் முடிவை எடுப்பாரா என்பது இன்று தெரியவரும்.
2021 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ஈபிஎஸ் நீக்கினார். இதையடுத்து பல கட்டங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். எனினும், கட்சி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஓபிஎஸ் தற்போது ''அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு'' என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டார். அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியே கிட்டியது. இச்சூழலில்தான் கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்த போது அவரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை. அதன் பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
அந்த சமயத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். அப்போதும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது தனக்கு வருத்தம் என்று ஓபிஎஸ் பதிவு செய்திருந்தார். பாஜக அணியில் ஓபிஎஸ் அணி இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையே இல்லாமல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இதனாலேயே பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் ஓபிஎஸ் அதற்குள் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது. ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருக்கக் கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்ட நிதி 2151 கோடி ரூபாயை அரசியல் காரணத்துக்காக தர மறுப்பது கண்டனத்துக்குரியது என்றும் அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். மத்திய அரசை கண்டித்து ஓபிஎஸ் முதல் முறையாக அறிக்கை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் இன்று ஆதரவாளர்களுடன் அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதால், அது தொடர்பாகவும் இன்று கலந்து ஆலோசிக்க உள்ளார். ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நகர்வு தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்புமா? என்பது போகப் போகத் தெரியும்.
-
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விஜய் மட்டுமே வெற்றிக்கு அருகில் வருவார்.. கட்டமைப்பு இல்லாத கட்சி தவெக.. ப.சிதம்பரம் சொன்ன டேட்டா! -
"வொர்த்தே இல்லையா?”.. விஜய் சொன்ன நேரம் பார்த்து டைமிங்கில் பார்த்திபன் போட்ட ட்வீட்! -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
அது வேற வாய்.. பெண்களுக்கு உதவித் தொகை! விஜய் முன்னிலையிலேயே விமர்சித்த அருண் ராஜ்! இப்போ பேசுவாரா? -
சென்னை நீலாங்கரை வீட்டில் சங்கீதாவை சேர்க்கல.. மனைவியின் கண்ணீரில் நனைந்த விஜயின் மகளிர் வாக்குறுதி -
விவாகரத்து இருக்கட்டும்.. தேர்தல் வேலையில் விஜய் தீவிரம்.. மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்! -
"உயிர் முக்கியம் பிகிலு”.. தவெக தலைவர் விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்! -
படத்துலதான் ரீமேக் பண்ணீங்க.. அரசியலிலும் காப்பிதானா? விஜய் வாக்குறுதியை விளாசும் நெட்டிசன்ஸ் -
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு! -
மகளிருக்கு மாதம் ரூ.2,500.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. தவெக தேர்தல் வாக்குறுதிகள் விஜய் அறிவிப்பு -
திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்! விஜய் வாக்குறுதி












Click it and Unblock the Notifications