வாரம் ஒரு முறை கட்சி அலுவலகம்... நிர்வாகிகள் சந்திப்பு... ஓ.பி.எஸ். முன்னெடுக்கும் புதிய முயற்சி...!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வாரம் ஒருமுறை விஜயம் செய்வது என முடிவெடுத்திருக்கிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
நிர்வாகிகளுக்கும் தனக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இந்த புதிய முயற்சியை முன்னெடுக்க உள்ளார்.
தொண்டர்களின் குறைகள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுத்து கட்சியில் தனக்கான இருப்பை வலிமையாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார் ஓ.பி.எஸ்.

தொண்டர்கள் பலம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இருந்த மதிப்பும், மரியாதையும் தனி ரகம். அவரது அறிமுகத்துக்காகவும், ஆதரவுக்காகவும் அவர் வீட்டு முன் குவிந்த நிர்வாகிகள் ஏராளம். ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்ததால் அதிகாரிகள் மட்டத்திலும் ஓ.பி.எஸ்.க்கு பெரும் செல்வாக்கு நிலவி வந்தது.

சரிந்த இமேஜ்
இப்படி அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருந்த பெரிய பிம்பத்தை தகர்த்தது வேறு யாருமல்ல, அவரே அவரது பிம்பத்தை கடந்த 2017-ம் ஆண்டு உடைத்துக்கொண்டார். தர்மயுத்தம் நடத்திய அவர் பின்னால் பெருமளவில் எம்.எல்.ஏ.க்கள் அணி வகுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பேரை தவிர யாரும் செல்லவில்லை. அப்போதே அவரது செல்வாக்கு சரிவதை உணர முடிந்தது. இதனிடையே சுதாரித்துக்கொண்ட அவர் ஒரு வழியாக சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்துடன் ஐக்கியமானார்.

வழிகாட்டுதல் குழு
அப்படி ஐக்கியமான அவர் இதுவரை அந்தப் பதவிக்குரிய வகையில் செயல்பட்டு தனக்கானஆதரவாளர்கள் வட்டத்தை தக்கவைக்க தவறியதன் விளைவாக, ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கக் கூட மூச்சு முட்ட போராட வேண்டிய சூழல் உருவானது. 2017-ம் ஆண்டு தர்மயுத்தத்தின் போது தன் பக்கம் நின்ற நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இப்போது தன்னுடன் இல்லை என்பதை ஓ.பி.எஸ். உணரத் தொடங்கியுள்ளார்.

ஓபிஎஸ் நம்பிக்கை
இந்நிலையில், வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் எண்ணத்தில் இருக்கிறார் அவர். கடந்த அக்டோபர் 17-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கூட இது குறித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் இழந்த செல்வாக்கை கட்சியினர் மத்தியில் மீட்டெடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications