அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்! இலவு காத்த கிளியான ஓபிஎஸ்..முதுகில் குத்திய பாஜக! அடுத்து என்ன?
சென்னை: பாஜகவை நம்பி அதிமுகவில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியை சந்தித்து அனுமதி கேட்டும் அது கிடைக்காத நிலையில் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள மதுரை பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்றும், விஜய்யுடன் அவர் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் முக்கியமானவர் ஓபிஎஸ். டிடிவி தினகரனுக்கு பிறகு தேனியில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார். சிறையிலிருந்து ஜெயலலிதா வந்ததும் பதவியை ஒப்படைத்துவிட்டு அமைச்சராக தொடர்ந்தார் ஓபிஎஸ்.
இதனால் தனக்கு சிக்கல் வரும் போதெல்லாம் ஜெயலலிதா முதலமைச்சராக நியமித்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இடைக்கால முதல்வரான ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா கொடுத்த நெருக்கடியால் தர்ம யுத்தத்தை தொடங்கி, அவர் சிறை சென்றதும், எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆதரவால் ஆட்சியை நிறைவு செய்த எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு பிறகு ஓபிஎஸ்ஐ கட்டம் கட்ட தொடங்கினார். ஒற்றை தலைமை கோரிக்கையால் ஓபிஎஸ் தனி அணியாக நின்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து டெல்லி வரை சட்டப் போராட்டம் நடத்தியும் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி பிளவுபட்ட நிலையில் பாஜக அணியில் சேர்ந்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தாலும், அதிமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் ஓபிஎஸ் தரப்பு மீது இபிஎஸ் தரப்புக்கு கோபம் அதிகரித்தது. எந்த காலத்திலும் ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என விரும்புகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்று அமைப்பை ஆரம்பித்து வரும் ஓபிஎஸ் அடிக்கடி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரான ரஞ்சித் குமார் காலில் கூட விழுகிறோம் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பேசினார். ஆனால் காலம் கடந்து விட்டது என ஒரே வரியில் பதிலளித்தார் எடப்பாடி. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இது ஒரு புறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என்பதை அறிவிக்க வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்பார்ப்பு. ஆனால் மோடியை சந்திக்க பன்னீர் செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பாஜக பேச்சை கேட்டு தான் வெளியே வந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கழற்றிவிட்டதாக கொந்தளிக்கின்றனர்.
அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகப்பெரிய மாநாட்டை நடத்துகிறது. தென்மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் புதிய கட்சி கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து அறிவிப்பார் என அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விஜயுடன் கைகோர்த்து சட்டமன்றத் தேர்தலை ஓபிஎஸ் சந்திக்கலாம் என கூறுகின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும் தன்னை ஏமாற்றிய அதிமுகவும் பாஜகவும் ஜெயிக்க கூடாது என்பதுதான் ஓபிஎஸ்-ன் திட்டம் என சொல்லப்படுகிறது.
-
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications