முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பி.எஸ்... பிரச்சார களைப்புக்கு காரணம் இது தான்!
Recommended Video
சென்னை: தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.க்கு அண்மைக்காலமாக அடிக்கடி முதுகுவலி ஏற்படுகிறதாம்.
அரசுப்பணி, கட்சிப்பணி என அதிக நேரம் அமர்ந்தே இருக்க வேண்டியுள்ளதால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டும் ஓ.பி.எஸ்.க்கு முதுகுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.
கோவையில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓ.பி.எஸ்.சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு சிகிச்சை பெறுவதால், முதுகுவலி ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றியதில் மீண்டும் ஓ.பி.எஸ்.க்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாம்.
இதன் காரணமாகவே 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ்.சற்று களைப்புற காணப்படுகிறாராம். இந்த முதுகு வலியோடுதான் சமீபத்தில் அவர் தனது மகனுடன் வாரணாசிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.