நேரம் வரும்! காத்திருக்கும் ஓபிஎஸ்! இனி எல்லாம் சுபமே! முனுசாமி ஊரிலிருந்து கிடைத்த புது தெம்பு!
சென்னை: அதிமுகவில் விரைவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏற்கெனவே இருந்த இரட்டை தலைமைகள் பிரிந்து கிடக்கிறார்கள். இருவரும் அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதும், பதவி கொடுப்பதும் என அறிக்கைகளை விட்டு வருகிறார்கள். அது போல் நீதிமன்ற கதவுகளையும் தட்டி வருகிறார்கள். சீசா விளையாட்டு போல் ஒருமுறை ஓபிஎஸ்ஸும் மறுமுறை எடப்பாடி பழனிசாமியும் நீதிமன்ற தீர்ப்பில் வென்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அண்ணாதுரை பிறந்தநாள்
இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்தநாளை கிராமங்கள்தோறும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
அதை ஏற்றுக் கொண்டு நாங்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். எங்களை போல் பிரிந்து கிடக்கும் எங்கள் பகுதி நிர்வாகிகளிடமும் ஒற்றுமை குறித்து பேசி வருகிறோம். தற்போதைக்கு இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றாலும் எதிர்காலத்தில் இரு அணிகளும் இணைய வாய்ப்புகள் உள்ளன.

சசிகலா இணைவார்
அது போல் அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அவரை கட்சியில் இணைப்பதற்கான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதற்கான வாய்ப்புகள் வரும். நிச்சயம் அதிமுகவில் சசிகலா இணைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.

ஓபிஎஸ் காய் நகர்த்தல்
அதிமுகவில் பெரும்பாலான உரிமைகள் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்ட நிலையிலும் அதிமுகவிற்கு கூட்டுத் தலைமை வகிக்கும் நாள் விரைவில் வரும் என ஓபிஎஸ் தரப்பு தங்களால் முயன்ற அளவுக்கு காய்களை நகர்த்தி வருகிறது. கடைசி அஸ்திரமாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதை கையில் எடுக்க ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
-
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை












Click it and Unblock the Notifications