ஒரு இடம் விடாமல் முட்டிமோதும் ஓபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்தை தடுக்க தேர்தல் ஆணையத்தை நாட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை வானகரத்தில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.

அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

தலைவர்கள் சந்திப்பு

தலைவர்கள் சந்திப்பு

அதனை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளுக்கு பின்னர் இரு தலைவர்களையும் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழுவை தடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்குழுவை தடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்

கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருப்பதால் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை நடக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வருகிறது.

தொடரும் புகார்கள்

தொடரும் புகார்கள்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜூலை 22 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என சொல்லி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு சாதகமான பதில் நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ் தரப்பு

தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ் தரப்பு

தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் சட்ட நிபுணர்களோடு ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நாளை தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவுக்கு எதிராக மனு அளிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+