ஒரு நபர் உயிரோடு இருக்கும்போது பதிவதே போதும்.. குடும்பத்தினர் ஒப்புதலின்றி உடல் தானம்.. புது சட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை தானம் பெறுவது குறித்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் வரவுள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமான ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

உயிருள்ள ஒருவர் தன்னுடைய உறுப்புகளில் ஒன்றை தேவைப்படும் பிறருக்கு தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது.. குறிப்பாக, 2 சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகம் தானமாக தரப்படுகிறது. ஆனால், இறந்தவர் உறுப்புகள் தானமாக வழங்கப்படுவதே உடலுறுப்பு தானமாகும்.

organ donation central government

மூளைச்சாவு: மூளைச் சாவு என்று அறிவிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்படுவதுதான் இந்த உடல் உறுப்பு தானம்.. மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகளை தானம் பெற வேண்டுமானால், மூளைச்சாவு அடைந்த குடும்பத்தினரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அத்துடன், உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவால் மூளைச்சாவு நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இதயம்,கல்லீரல், சிறுநீரகம், கணையம், நுரையீரல், குடல் ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தானம் செய்யலாம்... ஆனால், குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது... இந்திய சட்டத்தின்படி உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தினரிடமிருந்து முன் அனுமதி தேவை.

கண்கள் தானம்: இந்நிலையில், உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை அவரது இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்போவதாக கூறப்படுகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனையும் நடத்தி வருகிறது.

இதற்கு காரணம், இறந்தநபர் உயிருடன் இருக்கும்போது கண் தானம் செய்வதாக பதிவுசெய்து இருந்தாலும், உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும். ஆனால், உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர், தன்னுடைய இறப்புக்கு பிறகு கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்ததுமே, அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லையாம்.. இதனால், கண்கள் தானமாக கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுகிறது.

கண்தானம்: இதனால், வருடந்தோறும் பார்வையற்றவர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது எவ்வளவுதான், கண் தானம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் போதிய பலன்கள் கிடைப்பதில்லை. அதனால்தான், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம்-1994 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது..

அதன்படி, இறந்த நபர் உயிருடன் இருக்கும்போது கண்களை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியும் என்பதே புதிய சட்டதிருத்தமாகும்..

சட்டத்திருத்தம்: அதுமட்டுமல்ல, ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய இறப்புக்கு பிறகு உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்தாலும், உறவினர்களின் ஒப்புதலின்றி, அவரது உடலை மருத்துவக் கல்லூரியால் பெற்றுக் கொள்ள முடியும், இந்த சட்டத்திருத்தத்தைதான் மத்திய அரசு ஆலோசித்து வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+