ஒரு நபர் உயிரோடு இருக்கும்போது பதிவதே போதும்.. குடும்பத்தினர் ஒப்புதலின்றி உடல் தானம்.. புது சட்டம்?
சென்னை: உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை தானம் பெறுவது குறித்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் வரவுள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமான ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
உயிருள்ள ஒருவர் தன்னுடைய உறுப்புகளில் ஒன்றை தேவைப்படும் பிறருக்கு தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது.. குறிப்பாக, 2 சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகம் தானமாக தரப்படுகிறது. ஆனால், இறந்தவர் உறுப்புகள் தானமாக வழங்கப்படுவதே உடலுறுப்பு தானமாகும்.

மூளைச்சாவு: மூளைச் சாவு என்று அறிவிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்படுவதுதான் இந்த உடல் உறுப்பு தானம்.. மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகளை தானம் பெற வேண்டுமானால், மூளைச்சாவு அடைந்த குடும்பத்தினரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அத்துடன், உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவால் மூளைச்சாவு நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இதயம்,கல்லீரல், சிறுநீரகம், கணையம், நுரையீரல், குடல் ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தானம் செய்யலாம்... ஆனால், குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது... இந்திய சட்டத்தின்படி உறுப்பு தானம் செய்வதற்கு குடும்பத்தினரிடமிருந்து முன் அனுமதி தேவை.
கண்கள் தானம்: இந்நிலையில், உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை அவரது இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்போவதாக கூறப்படுகிறது.. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனையும் நடத்தி வருகிறது.
இதற்கு காரணம், இறந்தநபர் உயிருடன் இருக்கும்போது கண் தானம் செய்வதாக பதிவுசெய்து இருந்தாலும், உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும். ஆனால், உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர், தன்னுடைய இறப்புக்கு பிறகு கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்ததுமே, அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லையாம்.. இதனால், கண்கள் தானமாக கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுகிறது.
கண்தானம்: இதனால், வருடந்தோறும் பார்வையற்றவர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது எவ்வளவுதான், கண் தானம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் போதிய பலன்கள் கிடைப்பதில்லை. அதனால்தான், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம்-1994 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது..
அதன்படி, இறந்த நபர் உயிருடன் இருக்கும்போது கண்களை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியும் என்பதே புதிய சட்டதிருத்தமாகும்..
சட்டத்திருத்தம்: அதுமட்டுமல்ல, ஒருவர் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய இறப்புக்கு பிறகு உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்தாலும், உறவினர்களின் ஒப்புதலின்றி, அவரது உடலை மருத்துவக் கல்லூரியால் பெற்றுக் கொள்ள முடியும், இந்த சட்டத்திருத்தத்தைதான் மத்திய அரசு ஆலோசித்து வருகிறதாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications