Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்! உச்சபட்ச மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசின் திட்டத்தால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் தலைமுறை பட்டதாரிகள் நல்ல வேலைக்கு செல்வதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளன்று 'நான் முதல்வன்' என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் ஏழை எளிய மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இது எனது கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

 Our aim is first generation graduates to get jobs: CM Stalin shares data

கல்வி உதவித்தொகை தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பல்வேறு விஷயங்களை நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழக அரசு செய்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித்தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன.

மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகளும் நான் முதல்வன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்படுக்கிறது. தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் தயாராவதற்காக 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இப்படியாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் வேலைவாய்ப்பு திட்டம் 2024' மூலம் சேலம், கள்ளக்குறிச்சி அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2022-23 நிதியாண்டில், இத்திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர் என்று ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "மனநிறைவு தரும் செய்தி. இந்த வெற்றிப் பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

4 மாவட்டங்களில் இருந்து கலை - அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+