நான்கு நாட்களுக்கு பிறகு.. தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. காரணம் என்ன
சென்னை: தலைநகர் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாலேயே ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கொரோனா டிராக்டர் விஜயானந்த் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தில் வைரஸ் பரவலின் வேகம் சற்று குறைந்திருந்தது. கடந்த சில தினங்களாகவே மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 33 ஆயிரத்திலேயே இருந்தது.
இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 1307 பேர் உட்பட மொத்தம் 34875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கொரோனா டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தது.

அதேநேரம், தற்போது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சராசரியாக மாநிலத்தில் 1.55 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாசிட்டிவ் விகிதம் 21.6%ஆக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications