Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூக்கிட்டு போய்டுங்க.. ஆக்ஸிஜன் இல்லை.. முடியலை"..அதிர வைக்கும் உ.பி.. திணறும் யோகி!

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் லக்னோ திணறுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எங்க கிட்ட ஆக்ஸிஜன் தீர போகுது.. இனி கஷ்டம்.. வேற எங்காவது தூக்கிட்டு போயிடுங்க" என்ற கையை விரித்து டாக்டர்கள் சொல்ல.. அதை கேட்டு, நோயாளிகளின் உறவினர்களின் கதறல் விண்ணை முட்டுகிறது.. மற்றொரு பக்கம் ஆக்ஸிஜனை பெற்று கொள்ள, நோயாளிகளுடன் வரிசையில் நிற்கும் அவலம் நெஞ்சை பிசைகிறது.. இன்னொரு பக்கம் இறந்தவர்களை எரிக்க இடமில்லாமல், சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் கியூவில் நிற்பதை பார்த்து இதயமே வெடித்து சிதறுகிறது.. இதெல்லாம் யோகியின் லக்னோவில் நடந்து வரும் காட்சிகளாகும்...!

உத்தரபிரதேசத்திலும் நடந்து வருகிறது.. ஆஸ்பத்திரிகளில் இப்போது ஆக்ஸிஜன் வாங்குவதற்குதான் மக்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்..

அதுவும் தனிநபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன... மூச்சு திணறி கொண்டிருக்கும், தங்கள் பந்தங்களுக்காக ஆக்சிஜன் வாங்க முடியாமல் பலர் தவித்து போய் உள்ளனர்.

 அறிவிப்பு

அறிவிப்பு

"எங்க ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தீர போகிறது... இதனால் நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றி கொள்ளுங்கள் என்று செய்தி குறிப்பை வெளியிட்டது பெரிதும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.. இதை அறிவிப்பை கேட்டு, நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பெரும் பரபரப்பை அடைந்தனர்.. இதுபோல பல இடங்களில் ஆக்ஸிஜன் முடிந்துவிட்டது என்று நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது..

 போர்டுகள்

போர்டுகள்

நேற்று முழுவதும் லக்னோ ஆஸ்பத்திரிகளின் நிலைமைகளை பார்க்கவே படுமோசமாக இருந்தது.. ஒருபக்கம் ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க கால்கடுக்க காத்து நின்றனர்.. மற்றொரு பக்கம், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களே ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் நுழைகிறார்கள்.. இன்னொரு பக்கம், சிவில் ஆஸ்பத்திரியில் உள்ள கோவிட் வார்டில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் நோயாளிகளின் மூச்சுக்கள் திணறி கொண்டிருக்கின்றன.

 நோயாளிகள்

நோயாளிகள்

நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை பெற்று வருவதற்கு நோயாளிகளின் உறவினர்கன்ள ஆக்ஸிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் அந்த நிலையங்கள், திரண்டு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. பல கொரோனா நோயாளிகள், ஆக்ஸிஜனுக்காக காத்திருந்து உயிரைவிடும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது..

 உயிரிழப்பு

உயிரிழப்பு

நேற்று ஒருநாளில் மட்டும் 37,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. மேலும் 196 பேர் கொரோனாவுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதில், லக்னோவில் மட்டும் 14 பேர் இறந்துள்ளனர்.. இதில் கொடுமை என்னவென்றால், இதுவரை தொற்றினால் இறந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில், தற்போது ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

Recommended Video

    மக்களே உஷார்... வரும் வாரங்களில் உச்சம் பெறும் கொரோனா... மத்திய அரசு தகவல்!
     சடலம்

    சடலம்

    இறந்தவர்களை அடக்கம் செய்யவும் முடியாமல் உபி அரசு திணறி கொண்டிருக்கிறது.. இதனால் மயானம் கிடைக்காமல், ஆம்புலன்ஸ்களில் சடலங்களை வைத்து கொண்டு கியூவில் நிற்கிறார்கள்.. பல்வேறு இடங்களில் மைதானங்களில் கொரோனா நோயாளிகளின் சடலங்களை வைத்து எரித்து வரும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+