இவை சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? கொரோனா பற்றிய மோடி பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி
சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களுக்கு வரிசையாக தமிழில் ட்வீட் வெளியிட்டு கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்களின், திறப்பு நிகழ்ச்சியில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர் பேசுகையில், பிற நாடுகளை ஒப்பிட்டால் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா சிறப்பான இடத்தில் இருப்பதாக புகழ்ந்துரைத்தார். சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுப்பதன் விளைவாகத்தான் இந்தியா இந்த அளவுக்கு சிறப்பான நிலையில் இருக்கிறது. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

மோடி பேச்சு
மேலும், இந்தியாவில் குணமடைவர் விகிதம் என்பது பிற நாடுகளோடு ஒப்பிட்டால் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், தினசரி குணமடைவோர் விகிதம் அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அவர் பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே, உள்ள சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் இருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்த நிலையில் தான் பிரதமர் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

சரியான முடிவுகள் இதுதானா?
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதை பாருங்கள்: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்' என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?

தொழில்கள்
ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா?

தொழிலாளர்கள்
ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications