சிஏஏவால் யாரும் பாதிக்கப்படவில்லையா?.. அப்ப பட்டியலில் முஸ்லீம்களை இணைக்காதது ஏன்?- ப.சி.
சென்னை: சிஏஏவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் அந்த பட்டியலில் முஸ்லீம்களை இணைக்காதது ஏன் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தும், கருத்துகளை பரிமாறியும் வருகின்றனர். அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் பாதகமானது அல்ல என மத்திய அரசு பலமுறை தெளிவுப்படுத்திவிட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுவதற்கான திட்டம் ஏதும் இல்லை என சொல்லவிட்டார். எனினும் தேசத்தின் தலைநகர் டெல்லியிலும், தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

சிஏஏ
இதனிடையே கொல்கத்தாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், என்னை பொருத்தவரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என இஸ்லாமியர்கள் உறுதியளிக்கிறேன்.
|
சிறுபான்மை
தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் தவறான கருத்தை கூறி பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றார் அமித்ஷா. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்பட மாட்டார்கள என அமித்ஷா கூறியுள்ளார்.

முஸ்லீம்கள்
அது சரி சென்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும். ஒரு வாதத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பலன்கள்தான் கிடைக்கும் என்றால் சிஏஏ பட்டியலில் இருந்து முஸ்லீம்களை நீக்கியது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதி
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உக்கிரமாக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறை வெடித்தது. இதில் 46 பேர் பலியாகிவிட்டனர். இதில் உளவுத் துறை அதிகாரி அங்கிட் சர்மாவும் அடங்குவார். பற்றி எரிந்த டெல்லி இப்போதுதான் மெல்ல மெல்ல அமைதி நிலைக்கு திரும்புகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications