எங்களை பாதுகாத்தது உள்ளூர் மக்கள்தான்! பஹல்காம் தாக்குதலிலிருந்து தப்பிய தமிழர்கள் பேட்டி
சென்னை: பஹல்காம் தாக்குதலிலிருந்து எங்களை பாதுகாத்தது உள்ளூர் மக்கள்தான் என்று அங்கிருந்து தப்பிய தமிழர்கள் கூறியிருக்கின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதை கூறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு பயணிகள் என்பது தெரிய வந்திருக்கிறது.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இங்கு பைசாரன் பகுதிக்கு ஏராளமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். தாக்குதல் நடந்த இடம் வெட்டவெளி என்பதால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடியிருக்கின்றனர். இவர்களை உள்ளுர் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலரும் இருந்திருக்கின்றனர். அங்கிருந்து தப்பி இவர்கள் பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவர்கள்தான் தங்களை காப்பாற்றியதாகவும் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications