பாளையங்கோட்டை தொகுதி ஃபைனல் நிலவரம் என்ன? திமுக MLA சீட் ரேஸீல் யார்? யார்?
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பலரும் காய் நகர்த்தி வருவதோடு, சென்னையிலேயே முகாமிட்டு சீட் வாங்குவதற்கான கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் கவனிக்கத்தக்க தொகுதிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டசபைத் தொகுதியும் ஒன்றாகும். கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கணிசமான வாக்கு வங்கிகளை வைத்திருப்பதால் பாளையங்கோட்டையில் திமுக எளிதாக வென்று முடியும் என நம்புகிறது.
இந்நிலையில் திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் அரிகேசவநல்லூர் SS மீரான், முன்னாள் அமைச்சர் மைதீன் கான், உள்ளிட்ட பலரும் பாளையங்கோட்டையில் சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மைதீன் கானை பொறுத்தவரை வயது மூப்பு காரணமாக சீட் ரேஸில் பின் தங்கியிருப்பதால், அப்துல் வஹாப்பும், அரிகேசவநல்லூர் மீரானும் தான் சீட் ரேஸில் முன்னணியில் உள்ளார்கள்.
SS மீரானை பொறுத்தவரை 1989ஆம் ஆண்டு மக்கள் நல பணியாளராக இருந்து, படிப்படியாக திமுகவில் உயர்ந்து இன்று அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார்.
இதனிடையே மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப்பும் மீண்டும் எப்படியாவது பாளையங்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடுவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
இதற்கு மத்தியில் கே.ஏ.எம். நிஜாமிற்காக பாளையங்கோட்டை தொகுதியை மதிமுகவும் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கும் பாளையங்கோட்டை தொகுதியை எதிர்பார்த்தி காத்திருக்கிறார். இதனால் யார் வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தொகுதிவாசிகள் மற்றும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications