காவு வாங்கிய பேனர்.. சுபஸ்ரீ பெற்றோருக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நேரில் ஆறுதல்
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆறுதல் கூறினார்
Recommended Video
சென்னை: சென்னை பள்ளிக்கரணை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே தனது டூவீலரில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக சாலைகள் முழுக்க பேனர்களை வைத்திருந்தார்.

இதில் ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உடல் நசுங்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக இந்த துயர சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்பலிதான் கொடுப்பது" என்று ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்போது, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் சடலம் வைக்கப்பட்டு உள்ளது. தகவலறிந்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விரைந்து ஆஸ்பத்திரி சென்றார். அங்கு மகளை பறிகொடுத்து கண்ணீருடன் கதறி கொண்டிருந்த பெற்றோரை கட்சி சார்பில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக, சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன என்றும் ஐகோர்ட் காட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications