பான் கார்டு இருக்கா? இனி ஆதாருடன் தனியே இணைக்க தேவையில்லை! மத்திய அரசு கொண்டு வரும் புதிய மாற்றம்..
சென்னை: முக்கிய அடையாள அட்டையாக உள்ள பான் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளிாகி உள்ளது. இதுதொடர்பாக புதிய விதியை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது தற்போது பான் கார்டு - ஆதார் அட்டை இணைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் பற்றி இங்கு பார்ப்போம்.
பான் கார்டு (PAN Card அல்லது Permanent Account Number) நம் நாட்டை பொறுத்தவரை முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த தேதிக்கான சான்றாகவும், புகைப்பட சான்றாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பான் கார்டு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இதுதவிர நிதி சார்ந்த விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு அடையாள அட்டையாக இது விளங்கி வருகிறது. இதனால் தற்போது பான் கார்டு இன்றி யாரும் இருப்பது இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. ஒருவேளை பான் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அதனை பெற்று கொள்ள முடியும்.
நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் இந்த பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பலரும் பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டுடன் - ஆதார் கார்டை இணைந்திருப்பது அவசியமாகும்.
இதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறை சார்பில் காலஅவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காலஅவகாசம் என்பது ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு - ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்.
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் தற்போது பான் கார்டு விதியில் சில முக்கிய மாற்றங்களை செய்து புதிய விதியை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதி வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பான் கார்டு - ஆதார் கார்டு ஆகியவற்றை இணைக்காமல் உள்ளவர்களுக்கு நற்செய்தி வெளியாகி உள்ளது. அதாவது புதிய விதியின்படி நாம் இனி தனியே இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக பான் கார்டு விண்ணப்பம் செய்யும்போது ஆதார் அட்டையை ஆவணமாக வழங்கினால் நேரடியாக பான் கார்டும், ஆதார் அட்டையும் ஒன்றாக இணைக்கப்பட்டு விடும். இதனால் பான் கார்டு வாங்கிய பிறகு தனியே அதனை ஆதார் கார்டுடன் இணைக்க தேவையில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் குட்நியூஸ் வெளியாகி உள்ளது. அதன்படி 01.07.2017 ஆகிய தேதிக்கு பிறகு ஆதார் வழங்கி பான் கார்டு பெற்றவர்களும் இனி தனியே இணைக்க வேண்டாம். அவர்களுக்கான ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்கள் நேரடியாக இணைக்கப்பட்டு விடும். அதேவேளையில் 01.07.2017 ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு பெற்றவர்கள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அவர்கள் தனியே அதனை இணைத்து கொள்ள வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications