Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பான் கார்டு இருக்கா? இனி ஆதாருடன் தனியே இணைக்க தேவையில்லை! மத்திய அரசு கொண்டு வரும் புதிய மாற்றம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: முக்கிய அடையாள அட்டையாக உள்ள பான் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளிாகி உள்ளது. இதுதொடர்பாக புதிய விதியை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது தற்போது பான் கார்டு - ஆதார் அட்டை இணைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் பற்றி இங்கு பார்ப்போம்.

பான் கார்டு (PAN Card அல்லது Permanent Account Number) நம் நாட்டை பொறுத்தவரை முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த தேதிக்கான சான்றாகவும், புகைப்பட சான்றாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பான் கார்டு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

pan card income tax

இதுதவிர நிதி சார்ந்த விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு அடையாள அட்டையாக இது விளங்கி வருகிறது. இதனால் தற்போது பான் கார்டு இன்றி யாரும் இருப்பது இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. ஒருவேளை பான் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அதனை பெற்று கொள்ள முடியும்.

நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் இந்த பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பலரும் பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டுடன் - ஆதார் கார்டை இணைந்திருப்பது அவசியமாகும்.

இதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறை சார்பில் காலஅவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காலஅவகாசம் என்பது ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு - ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்.

இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் தற்போது பான் கார்டு விதியில் சில முக்கிய மாற்றங்களை செய்து புதிய விதியை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதி வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பான் கார்டு - ஆதார் கார்டு ஆகியவற்றை இணைக்காமல் உள்ளவர்களுக்கு நற்செய்தி வெளியாகி உள்ளது. அதாவது புதிய விதியின்படி நாம் இனி தனியே இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக பான் கார்டு விண்ணப்பம் செய்யும்போது ஆதார் அட்டையை ஆவணமாக வழங்கினால் நேரடியாக பான் கார்டும், ஆதார் அட்டையும் ஒன்றாக இணைக்கப்பட்டு விடும். இதனால் பான் கார்டு வாங்கிய பிறகு தனியே அதனை ஆதார் கார்டுடன் இணைக்க தேவையில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் குட்நியூஸ் வெளியாகி உள்ளது. அதன்படி 01.07.2017 ஆகிய தேதிக்கு பிறகு ஆதார் வழங்கி பான் கார்டு பெற்றவர்களும் இனி தனியே இணைக்க வேண்டாம். அவர்களுக்கான ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்கள் நேரடியாக இணைக்கப்பட்டு விடும். அதேவேளையில் 01.07.2017 ம் தேதிக்கு முன்பாக பான் கார்டு பெற்றவர்கள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அவர்கள் தனியே அதனை இணைத்து கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+