Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனு கொடுக்க சென்ற போது விபத்தில் பலியான ஊராட்சி மன்றத் தலைவர்! முதல்வர் காதுக்கு சென்ற துயரத் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக வளர்சித்துறை இயக்குநரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்னைக்கு காரில் சென்ற போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை சென்றுள்ள நிலையில், அங்கிருந்த அவருக்கு இந்த துயரத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Panchayat chairman died in an accident while going to give a petition, Chief Minister Stalin condoled

விபத்தில் பலியான இருவரும் மிக ஆக்டிவாக மக்கள் பணியாற்றக் கூடியவர்கள் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.மூலம் அறிந்துகொண்ட முதல்வர், உடனடியாக இரங்கல் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி அவர்களும், கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி அவர்களின் கணவரான அபிமன்னன் அவர்களும், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+